முகப்பு
தமிழ்நாடு

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு...

கோப்புப்படம் - ENS
பகிர்:

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள், மத்திய மற்றும் தென் உள்மாவட்டப் பகுதிகளில் இன்று இரவு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கடும் வெய்யில் இருந்து வருகிறது. எனினும் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.

இந்நிலையில் இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,

"சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று அவ்வளவு அனல் மிகுந்த ஒரு நாள்!

அதே வேளையில், கடந்த ஒரு மாதமாகவே கடும் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளான உள்மாவட்டப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு இன்று ஓர் அற்புதமான நாளாக இருக்கப்போகிறது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் ஏறக்குறைய அனைத்தும், மத்திய உள்மாவட்டங்கள் மற்றும் தென் உள்மாவட்டப் பகுதிகளில் இன்று இரவு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

summary

it is going to be amazing day for thunderstorms in interior, west, south districts: tamilnadu weatherman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.