ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்
ஆட்சி அமைக்க அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ள லீமா ரோஸ் தெரிவித்துள்ளது குறித்து...
தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லால்குடி எம்.எல்.ஏ., லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தொழிலதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், 60,795 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இன்று (மே 5) லீமா ரோஸ் வாழ்த்து பெற்றார்.
Advertisement
பின்னர் செய்தியாளர்களுடன் லீமா ரோஸ் பேசியதாவது:
''ஒரே குடும்பத்தில் மூன்று பேர் வெற்றி பெற்றது நினைத்துப் பார்க்க முடியாத பரிசு. எங்கள் குடும்பத்தினர் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு எடப்பாடி பழனிசாமியுடன் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நல்லபடியாக பேச்சுவார்த்தை முடியும்'' என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.