மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்துள்ளது குறித்து...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி பெற்றது.
இருப்பினும், திமுக இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
Advertisement
இந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை (மே 7) மாலை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதுபற்றி, பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
ஜனநாயக மரபையும் அரசியல் நாகரிகத்தையும் மதிக்கும் இந்த சந்திப்பு, மக்கள் நலனே முதன்மை என்ற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.