மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்! தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை! கனிமொழி
தமிழக அரசியல் களம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி பதில்...
தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, எனினும் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
"தமிழக தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு, ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு என்பது முக்கியமான விஷயம், அதனை நாம் மதிக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக தேர்தல் முடிவுகள் குழப்பமாக வந்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டியது நம் கடமையாகும்.
Advertisement
Advertisement
அதிமுகவுக்கு திமுக ஆதரவு என்பது யூகம்தான். யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அதிமுக சொல்வதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நிறைய வதந்தியால் பரவுகின்றன. இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல குழப்பங்கள் இருக்கின்றன.
தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை என்ற நிலைப்பாட்டில்தான் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
The People Verdict Must Be Respected: Kanimozhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.