ஏஐ விடியோவாக இருக்கலாம்! முதல்வராவதற்கே விஜய் ஏமாற்று வேலை! டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி...
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் விஜய் முதல்வராவதற்கே ஏமாற்று வேலை செய்கிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,
"ஆளுநரிடம் கடிதத்தின் நகலை கொடுத்திருக்கிறார்கள். அசல் கடிதம் எங்கே என்று கேட்டபோதுதான் ஆளுநரின் செயலரிடம் இருந்து எம்எல்ஏவுக்கு அழைப்பு வந்தது. உடனே காமராஜ், எங்களுடைய வழக்கறிஞரை தொடர்புகொண்டு பேசி ஆளுநரை சந்தித்தோம். நீங்கள் பெரிய நடிகராக இருக்கலாம், 108 இடஙக்ளில் வெற்றி பெற்றிருக்கலாம், எத்தனையோ பேரை நாங்கள் பார்த்துவிட்டோம். 30 ஆண்டுகளாக பல அரசுகள், முதலமைச்சர்கள், எத்தனையோ தாக்குதல்கள், ரெய்டுகளை பார்த்தவர்கள் நாங்கள். உங்களை மாதிரி நாங்கள் ஓடி ஒளியவில்லை. ஊழலை ஒழிப்பதாகக் கூறும் விஜய், முதலமைச்சர் ஆவதற்கே போலியான ஆவணத்தைக் கொடுக்கிறார். காமராஜர் இருந்த விடியோவே உண்மையில்லை. அது ஏஐயாக இருக்கலாம். தவெகவுக்கு ஆதரவாக காமராஜ் கையெழுத்திட்ட விடியோவின் உண்மைத் தன்மையை வெளியிட முடியுமா?
Advertisement
ஜனநாயக முறைப்படி கட்சிகளிடம் ஆதரவு கேட்கலாம், போலி கடிதம் கொடுத்து எம்எல்ஏவை விடியோ எடுத்து ஏன் முயற்சிக்கிறார்கள்?" என்று தெரிவித்தார்.
எம்எல்ஏ காமராஜ் பேசுகையில், "விஜய்க்கு பெரும்பான்மை இல்லை, அவர் ஏன் ஆட்சியமைக்க முயற்சி செய்ய வேண்டும்? அவரது கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்களிடம் ஆதரவு கேட்கலாம். தீயசக்தி திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்களிடம், அதிமுகவிடம் ஏன் ஆதரவு கேட்கிறார்கள்? எப்படியும் முதல்வராக வேண்டும் என்று முயற்சிக்கிறார்.
அமமுக ஆதரவு வேண்டும் என்றால் பொதுச் செயலாளரிடம் வந்துதானே பேச வேண்டும்?
விஜய்யைப் பார்த்து ஒரு பேட்டி எடுக்க முடியுமா? அப்படி விஜய் பேட்டி கொடுத்தால் நான் எம்எல்ஏ பதவியை விட்டு விலகுகிறேன்.
நான் இருந்த விடியோ போலியானது. நான் 25 நாள்களாக தேர்தல் பணியில் இருந்திருக்கிறேன். யாருக்காவது ஏதாவது எழுதியிருப்பேன்" என்று கூறினார்.