என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
அமைச்சராக இன்று பதவியேற்றது குறித்து கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தது தொடர்பாக...
தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபி தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்ற பின்பு, “என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று (மே 10) தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், அவருடன் தவெகவைச் சார்ந்த செங்கோட்டையன் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதுகுறித்து பேசிய செங்கோட்டையன், “நம்முடைய முதல்வரோடு இன்று பதவிப் பிரமாணம் செய்தது என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது. ஆகவே, இது இமாலய வெற்றி என்றுதான் கருதுகிறேன்.
Advertisement
அவருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் நான் கூர்ந்து கவனித்தேன். புரட்சித்தலைவருடனும், அம்மாவுடனும் பயணம் செய்திருக்கிறேன். முதல்வர் விஜய்யோடு பயணிக்கும் போதும் அதேமாதிரி உணர்கிறேன்.
இந்த அரசுக்கு என் உயிர்மூச்சுள்ள வரை, உறுதுணையாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.