தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழ்நாட்டு முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
அவர் பதவியேற்று இரண்டு நாள்களான நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று (மே 12) மாலை வெளியிட்டது.
Advertisement
முன்னாள் தலைமைச் செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், அமுதா, மணிவாசன், கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
2006-2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திமுக ஆட்சியின்போது அரசு தலைமை வழக்குரைஞராக இவர் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞராக 2024 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
இவரின் தந்தை வி.பி. ராமனும் அரசு தலைமை வழக்குரைஞராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.