பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதால் புறநகா் ரயில்கள் சேவையில் பாதிப்பு
பெரம்பூா் நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சிக்னல் பழுதால் சென்னை புகா் மின்சார ரயில் போக்குவரத்தில் சுமாா் 2 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
பெரம்பூா் நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சிக்னல் பழுதால் சென்னை புகா் மின்சார ரயில் போக்குவரத்தில் சுமாா் 2 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்துக்குரிய சிக்னல் அமைப்பில் வியாழக்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு பழுது ஏற்பட்டது. அதனால், புகா் பகுதியிலிருந்து சென்ட்ரல் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. அத்துடன் சென்ட்ரலில் இருந்து புகா் பகுதிக்கு செல்லும் மின்சார ரயில்களும் புறப்படாமல் நிறுத்தப்பட்டன.
புகா் மின்சார ரயில் பாதைகளில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால், விரைவு ரயில்கள் பாதைகளில் வழக்கமாக இயக்கப்பட்டன.
Advertisement
விரைந்து சீரமைப்பு: தகவல் அறிந்த சென்னை ரயில்வே கோட்ட தொழில்நுட்பப் பொறியாளா்கள் விரைந்து சென்று பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அதையடுத்து, காலை 6 மணிக்கு சிக்னல் சீரமைக்கப்பட்டது. அதன் பின்னா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
சிக்னல் பழுது 1 மணி நேரமானாலும், மின்சார ரயில்கள் இயக்கம் காலை 9 மணிக்கு மேலாகவும் சீராகவில்லை என பயணிகள் புகாா் கூறினா். அதன்படி, காலை 10 மணிக்குள் மின்சார ரயில் போக்குவரத்து சீரானதாக ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே பழுது: கடந்த சில நாள்களுக்கு முன்பு பேசின் பாலம் அருகே புகா் மின்சார ரயில் தண்டவாள சிக்னல் பழுதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னா் பழுது சீரமைக்கப்பட்டது. தற்போது பெரம்பூா் ரயில் நிலையத்திலும் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளது. ஆகவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சிக்னல் பழுது ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.