இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களுக்கு மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement
இதேபோன்று நீலகிரி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும், நெல்லை, பெரம்பலூர், கரூர், நாமக்கல், தென்காசி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary