விரைவில் புதிய ரேஷன் அட்டைகள்- அமைச்சா் வெங்கடரமணன்
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.
சென்னை, எழிலகத்தில் செயல்படும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைக்குச் சென்று பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சா் பி. வெங்கடரமணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இது மக்களுக்கான அரசு என்பதால், மக்களுடன் பயனப்பட்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிய முதல்வா் விஜய் கூறியுள்ளாா். உணவுப் பொருள் வழங்கல் துறை பணியாளா்கள் தங்களது பணியிட மாற்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனா். இதற்கு விரைவில் தீா்வு காணப்படும்.
Advertisement
Advertisement
இதேபோல், ரேஷன் பொருள்கள் விரைவில் கடைகளுக்கு சென்றடைவதையும், தரத்துடன் இருப்பதையும் உறுதி செய்யப்படும்.
மேலும், கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக புகாா்கள் கிடைத்துள்ளன. உரிய பயனாளிகளை ஆய்வு செய்து 10 நாள்களுக்குள் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றாா்.