ஒரத்தநாட்டில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், கெüதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் அலுவலக ஊழியர்களுக்கு இணையாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கல்வித் தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராகப் பதவி உயர்த்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
வட்டச் செயலர் துரை, வட்டப் பொருளாளர் ஜீவனாந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலர் விக்டோரியா வரவேற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.