பாலியல் கொடுமை : இளைஞர் கைது
தஞ்சாவூரில் உடன் சென்ற உறவினரைத் தாக்கி பெண்ணைப் பாலியல் கொடுமை செய்ததாக இளைஞரை
தஞ்சாவூரில் உடன் சென்ற உறவினரைத் தாக்கி பெண்ணைப் பாலியல் கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் கொடிக்காலூர் வடவாற்றங்கரையில் ஆக. 17-ம் தேதி இரவு குளிச்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது உறவினருடன் (இளைஞர்) சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் இவர்களை வழிமறித்தனர்.
இதையடுத்து, உறவினரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் பெண்ணைப் பாலியல் கொடுமை செய்து, அவரது கழுத்திலிருந்த இரண்டே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியை சேர்ந்த ஆர். தண்டாயுதபாணி (28), லோகேஷை தேடி வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்துக்கு புதன்கிழமை காலை வந்த தண்டாயுதபாணியை போலீஸார் கைது செய்தனர். லோகேஷை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.