முகப்பு
தஞ்சாவூர்

மனுநீதி நாளில் நலத் திட்ட உதவி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நீரத்தநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 12:58 pm IST
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நீரத்தநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 198 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சித் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். முகாமில் தேவனாஞ்சேரி சரகத்தைச் சேர்ந்த கடிச்சம்பாடி, கொத்தங்குடி, நீரத்தநல்லூர், தேவனாஞ்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் ஓய்வூதியம், புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், குடும்ப அட்டைகளில் திருத்தம், விதவை ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

முகாமில் 60 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்திலான வீட்டு மனைப்பட்டா, 135 பேருக்கு திருமண உதவி, இறப்பு குடும்ப நலநிதி, நலிந்தோர் நலத்திட்டம், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 18 லட்சம் நிதி உதவி, மூவருக்கு பட்டா மாற்றம் ஆணை ஆகியவை வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

முகாமில் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் திட்ட அலுவலர் சண்முகநாதன், ஆர்டிஓ சங்கரநாராயணன், வட்டாட்சியர் ஸ்ரீமாதவன், தனி வட்டாட்சியர்கள் வாசுதேவன், பிரபாகரன், பாண்டியன் மற்றும் கொத்தங்குடி, கடிச்சம்பாடி, தேவனாஞ்சேரி ஊராட்சித் தலைவர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments