வடக்கு வாசலில் வழிந்தோடும் சாக்கடை
தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள சாக்கடையில் புதன்கிழமை ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.
தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள சாக்கடையில் புதன்கிழமை ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.
இந்தச் சாக்கடை மீது அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தில் புதன்கிழமை காலை அடைப்பு ஏற்பட்டது.
இதனால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Advertisement
Advertisement
தகவலறிந்த நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர், நகர் மன்றத் தலைவர் தெரிவித்தது:
வடக்கு வாசலில் சாலை உயர்த்தப்பட்டதால் சிறுபாலம் கீழே போய்விட்டது. இதனால், கழிவு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாகச் சீரமைத்து புதிதாக சிறுபாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.