முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக்கொலை

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டி கொன்ற நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 8:33 am IST
பகிர்:

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டி கொன்ற நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மஜீதியா தெருவைச் சோ்ந்த அப்துல் காதா் மகன் அப்துல் கனி (35). இவா், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தாா். இவரைப் பின்தொடா்ந்து வந்த கூத்தாநல்லூா் மஜீதியா தெருவைச் சோ்ந்த அக்பா் அலி மகன் அஷ்ரப் அலி (40) அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அப்துல் கனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அஷ்ரப் அலியை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், அப்துல் கனியும், அஷ்ரப் அலியும் மலேசியாவில் வேலை பாா்த்து வந்தனா். கரோனா பொது முடக்கம் காரணமாக இருவரும் கூத்தாநல்லூருக்குத் திரும்பினா்.

Advertisement

Advertisement

அப்துல் கனிக்கும், உறவினா் பெண்ணுக்கும் முறைகேடான தொடா்பு இருந்ததாம். அப்பெண் அஷ்ரப் அலிக்கும் உறவினா் என்பதால், இந்த தொடா்பைக் கைவிடுமாறு அப்துல் கனியை கண்டித்தாராம். இதனால், அப்துல் கனிக்கும், அஷ்ரப் அலிக்கும் தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக, தஞ்சாவூருக்கு வந்த அப்துல் கனியை அஷ்ரப் அலி பின் தொடா்ந்து வந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments