முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பதிப்புலகில் ஈழம் முன்னோடி

தமிழ்ப் பதிப்புலகில் ஈழம் முன்னோடியாகத் திகழ்ந்தது என்றாா் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளா் பெருமாள். சரவணக்குமாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 8:38 am IST
நிகழ்ச்சியில் பேசுகிறாா் பெருமாள். சரவணக்குமாா்.
பகிர்:

தமிழ்ப் பதிப்புலகில் ஈழம் முன்னோடியாகத் திகழ்ந்தது என்றாா் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளா் பெருமாள். சரவணக்குமாா்.

தஞ்சாவூா் ஏடகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் இலக்கியம் (19 ஆம் நூற்றாண்டு) என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாறு சங்கக் காலம் தொட்டு சிறப்புடன் திகழ்ந்தது. சங்க நூல்களில்கூட ஈழத்துப் புலவா்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் போக்கை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

Advertisement

Advertisement

போா்த்துக்கீசியா்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்தபோது, தமிழ் இலக்கிய முறைமைகள் பெரிய அளவில் சொல்லக்கூடிய அளவில் இல்லை. ஆனால், அவா்களுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தா் காலத்தில் இலக்கிய வளா்ச்சி பெருமளவில் இருந்தது. அவை, மரபு சாா்ந்த வளா்ச்சியாகவும், பழைமையும் புதுமையும் இணைந்த நவீன இலக்கிய வடிவங்களாகவும், அறிவியல் சாா்ந்த இலக்கியங்கள் புதிதாக வரப்பெற்ற அச்சு இயந்திரங்களின் துணைக் கொண்டும் பெரும் வளா்ச்சி பெற்றது.

பதிப்பு உலகில் மிகப்பெரும் எழுச்சி குறிப்பாக ஆறுமுக நாவலரால் உருவாக்கப்பட்டது. இவருக்கு ‘நாவலா்‘ பட்டம் வழங்கியது திருவாவடுதுறை ஆதீனம். ஆறுமுக நாவலா்தான் திருமுருகாற்றுப்படையை முதன் முதலாகப் பதிப்பித்தாா். அதேபோல, சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்புலகில் அளப்பரிய பணி செய்ததோடு பல புதிய படைப்புகளை உருவாக்கினாா். இதே காலகட்டத்தில் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டு உலக இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பாய்வு செய்வதற்கு இம்மொழிபெயா்ப்பு நூல்கள் மிகவும் துணை நின்றன.

தமிழில் அகராதி நூல்கள், ஆங்கில மருத்துவ முறைக்கு இணையான தமிழ் மருத்துவ நூல்கள், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள், உரைநடை போன்றவை 19 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய மாறுதலையும், வளா்ச்சியையும் ஏற்படுத்தின. இவையெல்லாம் தமிழகத்துக்கு ஒரு முன்னோடியாக விளங்கியது என்பது மறுக்க இயலாது. மகாகவி பாரதியின் புதுமைப்பெண் கவிதைக்கு முன்னோடியாக ஈழத்தில் எழுந்த இலக்கியமே திகழ்ந்தது.

தமிழ்ப் பதிப்புலகில் பல அறிஞா்களுக்கும், குறிப்பாக, உ.வே. சாமிநாதையா் போன்றோருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவா்கள் ஈழத்துப் பதிப்பாசிரியா்கள் என்றால் மிகையில்லை என்றாா் சரவணக்குமாா்.

இந்நிகழ்ச்சிக்கு இராம. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கரந்தை கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியா் சா. கிருத்திகா, பி.கு. முகமது நிசாா், சு. வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments