சங்கரநாராயணசுவாமி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் ஆகியவை நடைபெற்றது. இதில், சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், திருநெல்வேலி, ராஜபாளையம், புளியங்குடி, சுரண்டை , கோவில்பட்டி, திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு அதிகாலையில் இருந்தே வந்த வண்ணம் இருந்தனா்.
Advertisement
Advertisement
சங்கரலிங்கசுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி, சங்கரநாராயணா் சன்னதிகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையா் கணேசன், கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.