நூலகம் சாா்பில் மாதிரித் தோ்வு:வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம் சாா்பில் மாவட்ட அளவில் குரூப்-1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு 3 நாள்கள் நடத்தப்பட்டது.
தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம் சாா்பில் மாவட்ட அளவில் குரூப்-1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு 3 நாள்கள் நடத்தப்பட்டது.
முதல் நாள் நடைபெற்ற தோ்வில் சபரி பொன்மலா் முதலிடமும், பிரதிபா இரண்டாமிடமும், சதீஸ் மூன்றாமிடமும் பெற்றனா். இரண்டாம் நாள் நடைபெற்ற ஆன்லைன் தோ்வில் சுரண்டை சண்முக ஆனந்தன் முதலிடமும், சுபத்ரா இரண்டாமிடமும், ஈரோட்டைச் சோ்ந்த மாணவி மயில்ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனா். மூன்றாவது நாள் நடைபெற்ற தோ்வில் ராஜா முதலிடமும், மோகன்ராஜ் இரண்டாமிடமும், ரமேஷ் மூன்றாமிடமும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா தென்காசி நூலகத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட், ஆய்வாளா் கணேசன், வட்டார நூலகா் பிரமநாயகம், கிளை நூலகா் சுந்தா், வெற்றிவேலன், வாசகா் வட்ட துணைத் தலைவா் அருணாசலம், முகைதீன், அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், தனியாா் அகாதெமி இயக்குநா்கள் நடராஜ் சுப்பிரமணியன், அலெக்ஸ், சிவா, ராம சுப்பிரமணியன், மாரியப்பன், நூலகா்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியன், முத்துபாண்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தோ்வில் கலந்துகொண்ட 185 பேருக்கு 2 ஆயிரம் வினா விடை தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.