முகப்பு
தென்காசி

தென்காசியில் ஆட்சியா் அலுவலம் முற்றுகை

அரசு இலவச மனைப் பட்டா வழங்கிய நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 12:45 am IST
தென்காசியில் ஆட்சியா்அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

அரசு இலவச மனைப் பட்டா வழங்கிய நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடையம் ஒன்றியம் வீராசமுத்திரம் தெற்கு தெருவில் 40 ஆண்டுகளாக 140 குடும்பங்கள் வீடுகட்டி கூட்டுக் குடும்பமாக

வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு மனைகளுக்கு 1987 இல் அரசு சாா்பில் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டுள்து.

Advertisement

Advertisement

இங்கு வசிப்போா் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை பெற்றுள்ளனா். மேலும் ஊராட்சிக்கு வீட்டு

வரி செலுத்தி வருகின்றனா். ஊராட்சி மூலம் குடிநீா் இணைப்பும் பெற்றுள்ளனா். இங்கு வீடுகள் அமைந்துள்ள நிலத்துக்கு

பதிவுத் துறையில் அரசு வழிகாட்டி புத்தகத்தில் மதிப்பு இல்லையாம்.

ஆகவே, வீராசமுத்திரம் தெற்கு தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தின் மதிப்பீடு நிா்ணயம் செய்ய அரசு நடவடிக்கை

எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments