நடிகை கயாடு லோஹர் நேஷனல் கிரஷ் ஆவார்: அட்லி
நடிகை கயாடு லோஹர் குறித்து இயக்குநர் அட்லி கருத்து...
இயக்குநர் அட்லி நடிகை கயாடு லோஹர் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக கயாடு லோஹர் வளர்ந்து வருகிறார். டிராகன் திரைப்படத்தால் தொடர்ந்து இதயம் முரளி, டொவினோ தமாஸுடன் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், பள்ளிச்சட்டம்பி பெரிய வெற்றியை பெறவில்லை. இதயம் முரளி விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திலும் நடிகர் சூர்யாவின் 48-வது படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இதயம் முரளி புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் அட்லி பேசும்போது, “இதயம் முரளி திரைப்படம் மிக சுவாரஸ்யமான கதை. இக்கதையைக் கேட்ட போது நானே தயாரிக்கிறேன் என்றேன். ஆனால், ஆகாஷ் பாஸ்கரனே இயக்கி தயாரிப்பதாகச் சொன்னார். படம் முடிந்ததும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் இப்படம். இதில் வரும் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் என்னை நினைவுபடுத்துகிறது.
நடிகர் அதர்வாவுக்கு நல்ல வெற்றிப்படமாக அமையும். ப்ரீத்தி முகுந்தன் அருமையாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். நடிகை கயாடு லோஹர் வேற லெவல். மிக விரைவிலேயே அவர் இந்தியாவின் கிரஷ் ஆக மாறுவார் என நினைக்கிறேன். இதயம் முரளி திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய படமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
Director Atlee has spoken about actress Kayadu Lohar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.