குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.
குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா். பிற்பகலில் பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.