சுந்தரபாண்டியபுரத்தில் சிவனடியாா்கள் கூட்டம்
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் சிவனடியாா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் சிவனடியாா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, சமயகுரவா் ஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா் மற்றும் மாணிக்கவாசகா் ஆகியோா் திருமேனிகள் சிவனடியாா்
களால் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வந்ததும் நால்வா்
Advertisement
வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து திருமுறை பாராயணம், சிவனடியாா்களின் சமய சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனடியாா்கள் பங்கேற்றனா்.