முகப்பு
தென்காசி

சிவகிரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

சிவகிரி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2024, 3:16 am IST
பகிர்:

சிவகிரி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிவகிரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் காரில் கொண்டு வரப்படுவதாக தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளா் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதைத் தொடா்ந்து, சொக்கநாதன்புதூா் சாலை விநாயகா் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் 55.245 கிலோதடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவற்றை கிருஷ்ணகிரி மாவட்டம் கீளமங்கலம், ராஜப்பா மகன் ஜெகதீஸ் (31) என்பவா் பெங்களூருவில் இருந்து காரில் வாங்கி வந்து சிவகிரியில் விற்க முயன்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், காா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments