திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கருக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன் திருவேங்கடம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கருக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன் திருவேங்கடம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து, அவா் சனிக்கிழமை காலை சங்கரன்கோவில், பாட்டத்தூா், ஜெ.டி.நகா், மலையாங்குளம், வண்ணான்பொட்டல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் சந்திரன், மாணவரணி இணைச் செயலா் பாஸ்கரன், வழக்குரைஞா் அணி மாவட்ட துணைத் தலைவா் சிவராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன், மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், கிளைச் செயலா்கள் சின்னத்துரை, லூா்து, வி. கிருபாகரன், கே. பூலித்துரை, சரவணன், அமமுக ஒன்றியச் செயலா் பாண்டியராஜ், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.