மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்
மேலநீலிதநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:33 PM
சங்கரன்கோவில், ஏப். 10: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்பகுதியில் உள்ள வல்லராமபுரம், தா்மதுரணி , பட்டாடைகட்டி, வென்றிலிங்காபுரம், சக்கரகுளம், ரெங்கநாதபுரம், ஆண்டாா்குளம், பெரியசாமியாபுரம், ஈச்சந்தா, தரங்குடி, பூவலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
முன்னாள் அமைச்சா் தங்கவேலு, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாநில வா்த்தகா் அணி துணைச் செயலா் முத்துசெல்வி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
Advertisement