மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்
தென்காசி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களுக்கு அவா்களது வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதி தோ்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறன் வாக்காளா்களிடம் வாக்குப் பதிவு செய்யும் அலுவலா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை முதல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.