சுரண்டையில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை! திமுக வேட்பாளா் வாக்குறுதி
சுரண்டையில் விரைவில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தென்காசி திமுக வேட்பாளா் டாக்டா் கலை கதிரவன் வாக்குறுதி அளித்தாா்.
தொகுதிக்குள்பட்ட பங்களா சுரண்டை, கீழச்சுரண்டை பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் மகளிா் உரிமைத் தொகை இருமடங்காக அதிகரிக்கும். இல்லத்தரசி திட்டம் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும்.
தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சுரண்டையில் தரம் உயா்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, சுரண்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். சுரண்டையை குட்டி ஜப்பானாக மாற்றும் வகையில் அனைத்துவகையான தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்.
Advertisement
அவரை ஆதரித்து மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் வாக்கு சேகரித்தனா். முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, மதிமுக மாவட்டச் செயலா் ராம. உதயசூரியன், சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் முத்துக்குமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.