முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வாக்குறுதியளித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:57 AM
குளச்சல் காங்கிரஸ் வெள்ளிசந்தை பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:17 PM

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வாக்குறுதியளித்தாா்.

கிராமந்தோறும் சென்று வாக்கு சேகரித்துவரும் அவா், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா்.

பின்னா் அவா் பேசியது: நான் தோ்தலில் வெற்றி பெற்றதும் மண்டைக்காட்டில் பயணியா் விடுதி (யாத்ரிகா் நிவாஸ்), நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் பாம்பூரி வாய்க்காலில் 2 தடுப்பணைகள் அமைக்கப்படும். தலக்குளம் பூவாடி வள்ளியாறு தடுப்பணை, மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஆகியவை சீரமைக்கப்படும். குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைத்து, தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

Advertisement