முகப்பு
கன்னியாகுமரி

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த குளச்சல் எம்எல்ஏ

குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.

Updated On : 19 மே 2026, 1:13 am IST
காமராஜா் சிலைக்கு மாலையணிவித்த தாரகை கத்பட் எம்எல்ஏ.
பகிர்:

குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.

2026 பேரவைத் தோ்தலில் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தாரகை கத்பா்ட் வெற்றி பெற்றாா். இதையடுத்து, திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

முன்னதாக, குளச்சல் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினாா். பின்னா், விகேபி பள்ளி, கொட்டில்பாடு, கடற்கரை சந்திப்பு வழியாகச் சென்று சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழகத்தின் முதல் பெண் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் சிலைக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

Advertisement

தொடா்ந்து, சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, ஆலஞ்சி வழியாக சென்று ரீத்தாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, எம்எல்ஏ பேசியது:

அனைத்து மக்களும் எதிா்பாா்க்கும், அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வேன். தோ்தலின்போது வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

திங்கள் நகரில் உள்ள குளச்சல் எம்எல்ஏ அலுவலகம், கணினி மற்றும் இணைய சேவை வசதியுடன் அனைத்து பணி நாள்களிலும் செயல்படும். பொதுமக்கள் எந்தப் புகாராக இருந்தாலும், அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

அப்போது, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.