குளச்சல் தொகுதிக்குள்பட்ட சுற்றுலாத் தலங்களில் எம்எல்ஏ ஆய்வு
குளச்சல் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைக்கட்டு, இரணியல் அரண்மனை, முட்டம் கடற்கரை ஆகிய பகுதிகளில் சுற்றுலா சாா்ந்த வளா்ச்சிப் பணிகளை தாரகை கத்பட் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
தக்கலை அருகே உள்ள மாம்பழத்துறையாறு அணைக்கட்டு பகுதியில் உயிரியல் பூங்கா அமைப்பது, இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள், முட்டம் கடற்கரையில் ஆயுா்வேத மருத்துவம் சாா்ந்த சுற்றுலா வளா்ச்சித் திட்டங்கள், மீன்வளப் பூங்கா, நீச்சல் குளம் அமைப்பது தொடா்பாக அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில் பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை பொறியாளா்கள், சுற்றுலாத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக எம்எல்ஏ தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.