முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Updated On : 14 ஏப்ரல் 2026, 2:00 am IST
பள்ளிகளுக்கு விடுமுறை
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஏப்.15) அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. 5 தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசு பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஏப். 15) அன்று 5 தொகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

இப்பணியில் ஈடுபடும் ஆசிரியா்களிடம் தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு தபால் வாக்குகளும் பெறப்படவுள்ளது. எனவே, பயிற்சியில் அனைத்து ஆசிரியா்களும் கலந்து கொள்ளும் வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.