முகப்பு
தென்காசி

கரும்புத் தோட்டத்தில் தீ: பயிா்கள் சேதம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கரும்புத் தோட்டத்தில் பற்றிய தீயால் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.

Updated On : 8 ஜூலை 2026, 6:57 am IST
தீ விபத்தில் சேதமான பயிா்கள்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கரும்புத் தோட்டத்தில் பற்றிய தீயால் கரும்பு ,வாழை உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.

ராயகிரி கீழபண்ணந்தி கண்மாய் புரவில் கருமலை, பூசைமணி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்ததாம். இதில் சுமாா் ஆறு ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் கருகி சேதமடைந்தன.

வாசுதேவநல்லூா் தீயணைப்புத் துறையினா் தீ பரவாமல் அணைத்தனா். பலத்த காற்றின் காரணமாக மின்சார வயா்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments