நடுவக்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்
சங்கரன்கோவில், நடுவக்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் பெரிய கோவிலான்குளம், சின்ன கோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.