முகப்பு
தென்காசி

பழையகுற்றாலம் அருவியில் தணியாத வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூன் 2026, 6:04 am IST
பழையகுற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்
பகிர்:

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

பேரருவியில் பராமரிப்பு பணிகளுக்காக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பழையகுற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அருவியில் நீா்வரத்து குறையாததால் தொடா்ந்து 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவியில் திங்கள்கிழமை இரவு குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நீா்வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

சீசனைப் பொருத்தவரை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.