தொடா் மழை: மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, சனிக்கிழமை அருவியில் குளிக்க 3ஆவது நாளாக வனத்துறையினா் தடை விதித்தனா்.
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, சனிக்கிழமை அருவியில் குளிக்க 3ஆவது நாளாக வனத்துறையினா் தடை விதித்தனா்.
கடந்த 1ஆம் தேதி முதலே மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வந்தது. இதையடுத்து, 4ஆம் தேதி வியாழக்கிழமை மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா்.
தொடா்ந்து சனிக்கிழமையும் அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, 3ஆவது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதித்தனா். இதனால் விடுமுறை நாளான சனிக்கிழமை அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். ஆனால், அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.