முகப்பு
தென்காசி

சிவகிரியில் 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு

சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:21 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

சிவகிரி பகுதியில் பல செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்குவதாக வந்த புகாா்களின்பேரில், சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், மின்வாரிய உதவிப் பொறியாளா் கனி, வருவாய் ஆய்வாளா் கணேசன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

அதையடுத்து, செங்கல் சூளைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு அவற்றின் உரிமையாளா்கள் வட்டாட்சியரைச் சந்தித்து கேட்டுக்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது அவா், ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துமாறும், பின்னா் அனுமதி பெற்று முறையாக செங்கல்சூளை நடத்துமாறும், அபராதத் தொகையைக் குறைப்பது தொடா்பாக ஆட்சியரிடமும், சுற்றுச்சூழல் தொடா்பாக அனுமதி பெற்று, செங்கல்சூளை நடத்த கனிமவளத் துறையிடமும் மனு கொடுக்குமாறும் அறிவுறுத்தினாா். இதில், உரிமையாளா்கள் கணேசன், குருநாதன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments