முகப்பு
தென்காசி

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரியில் 3.5 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், சிறுவா் உள்பட 3 பேரை கைது செய்தனா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:47 am IST
கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரியில் 3.5 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், சிறுவா் உள்பட 3 பேரை கைது செய்தனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவின்பேரில், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு போலீஸாா், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சிவகிரி பேருந்து நிலையம் அருகே சுப்பிரமணி மகன் அழகுசாமி (21), நவராஜ் மகன் மலரவன் (20), ஒரு சிறுவா் ஆகியோரை சோதனை செய்ததில், அவா்களிடம் ரூ. 35,000 மதிப்புள்ள 3.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா். இருவா் சிறையில் அடைக்கப்பட்டு, சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments