முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

Updated On : 21 ஜூன் 2026, 4:44 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பகிர்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் வெள்ளத்துரை, தங்கப்பாண்டி, மு. செல்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா. அசோக்ராஜ் கண்டன உரையாற்றினாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் செந்தில்வேல், முத்தானந்தம், தேவதாஸ், விவசாயத் தொழிலாளா் சங்கத் தலைவா் பாலுச்சாமி, மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments