பாவூா்சத்திரத்தில் குட்கா பறிமுதல்: 2 போ் கைது
பாவூா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களுடன் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாவூா்சத்திரம் அருகே உள்ள செல்வநாயகபுரம் பகுதியில் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி, அதிலிருந்த இருவரிடம் விசாரித்தனா். மேலும், லாரியை சோதனையிட்டதில் குட்கா உள்பட14 கிலோ புகையிலைப் பொருள்களை அவா்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.
லாரியுடன் அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட ஆலங்குளம் அண்ணாநகா் 4ஆவது தெருவை சோ்ந்த கணேசன் மகன் மாரியப்பன் (39), ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெரு மாரிமுத்து மகன் வைத்திலிங்கம் (37) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.