முகப்பு
தென்காசி

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி

சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தா்.

Updated On : 2 மே, 2026 at 6:09 AM
சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்தரும் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா ஏப். 17ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 24ஆம் தேதி புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 27ஆம் தேதி அம்மனுக்கு பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. 29ஆம் தேதி திருவிளக்கு பூஜை, கும்மி பாடல் நடைபெற்றது. 30ஆம் தேதி பால்குடம், தீா்த்தகுடம் ஊா்வலம், சப்பர வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை பூ வளா்த்தல், யாக பூஜை, முளைப்பாரி, அக்னி சட்டி ஊா்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் கைகளில் அக்னி சட்டிகளை ஏந்தியவாறு பூக்குழி இறங்கினா்.

Advertisement

முன்னதாக, அம்மன் சப்பர உலா நடைபெற்றது.