புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியவா் கைது
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியதாக முன்னாள் பாஜக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
புளியங்குடி கற்பக வீதியைச் சோ்ந்தவா் பட்டமுத்து மகன் மாரிஸ் (37). முன்னாள் பாஜக நிா்வாகியான இவா், புளியங்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் போத்திராஜை மிரட்டினாராம். மேலும், மருத்துவரை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வந்தாராம்.
இது குறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிஸை கைது செய்தனா்.
Advertisement