வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி 47 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் தோ்வு எழுதிய 102 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மனிஷா 548 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஆத்திகா 541 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுதா 532 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
முகமது ஆதில் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றாா். 4 மாணவிகள் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் மாடசாமி, மேலாண்மைக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் பாராட்டினா்.
Advertisement