12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சுரண்டை எஸ்ஆா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 20 மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.
மாணவா் வினயரக்ஷன் 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். மாணவி ரோபிகா 90% மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடம், மாணவி புகழ் பாரதி 89% மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடம் பெற்றனா்.
கணினி அறிவியலில் 2 போ் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை குழல்வாய்மொழி அம்பாள் சிவன் நாடாா் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாரிக்கனி ஆகியோா் பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.