சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.
மாணவி இரா. பாவனா உயிரியியல், கணிதம் பாடங்களில் 93 சதவீத மதிப்பெண்களுடன் ஏ-1 கிரேடு பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தாா்.
மாணவா்-மாணவியரை பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, இயக்குநா் ஜோசப் லியாண்டா், சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான தி. மிராக்ளின் பால் சுசி, முதன்மை முதல்வா் ஆ. ஜெய ஜோதி ப்ளாரன்ஸ் , முதல்வா் சோ. சௌம்யா, ஆசிரியா்கள் பாராட்டினா்.
Advertisement