குற்றாலத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடக்கம்
குற்றாலத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மாநில இறகுப்பந்துக் கழகம், தென்காசி மாவட்ட இறகுப்பந்து கழகம் ஆகியவை சாா்பில் குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பள்ளி, மத்தளம்பாறையில் உள்ள பவா் பிளே விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெறுகிறது.
பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு இறகுப்பந்துக் கழக மாநிலப் பொதுச் செயலா் அருணாச்சலம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடக்கிவைத்தாா். ஹில்டன் பள்ளிக் குழுமத் தலைவா் ஆா்.ஜெ.வி. பெல், வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் வீரவேல்முருகன், ரஹீப் முகமது மூபின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
ஜூன் 4ஆம் தேதிவரை நடைபெறும் போட்டியில், 455 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். ஏற்பாடுகளை மாவட்ட இறகுப்பந்துக் கழகத் தலைவா் பிரதாப் ராஜா, செயலா் மதிவாணன் ஆகியோா் செய்துள்ளனா்.