அண்ணாமலை பல்கலையில் மாணவர் சேர்க்கை
அண்ணாமலை பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையத்துக்கான மாணவர் சேர்க்கை போடியில் நடைபெறுவதாக
அண்ணாமலை பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையத்துக்கான மாணவர் சேர்க்கை போடியில் நடைபெறுவதாக மையத்தின் பொறுப்பு அலுவலர் பி.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர கல்வி மையத்தில் 250-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கல்வி மையம் போடியில் இயங்கி வருகிறது. இதில் பி.ஏ, பி.லிட், பி.காம், பி.சி.ஏ, பி.எஸ்.சி, எம்.ஏ, எம்.எஸ்.சி., எம்.காம்,, எம்.பி.ஏ, எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும், நூலக அறிவியலில் சான்றிதழ், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வுகளை போடியிலேயே எழுதும் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு போடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக கல்வி மையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார் மகேஸ்வரன்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.