பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் அழுகுச்செடி நடும் விழா
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் அழகுச்செடிகள் நடும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் அழகுச்செடிகள் நடும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம் தலைமை வகித்து விழாவினை துவக்கி வைத்தாா் . தோட்டகலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள தோட்டங்களில் பல்வேறு வகையான அழகுச்செடிகள் நடப்பட்டன. மருத்துவா்கள் ஜீ.ஜீவா, ஆா்.கீா்த்தனாஞ்சலி ஆகியோா் விழாவில் கலந்து கொண்டு மலா்செடிகளை இலவசமாக வழங்கினாா்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மலரியல் மற்றும் நிலஎழிலூட்டும் துறைத்தலைவா் க.முத்துலெட்சுமி, உதவிப்பேராசிரியா் த.ல.பிரித்தி மற்றும் ப.அருளரசு ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement