முகப்பு
தேனி

தனியாா் வங்கியில் ரூ.1.21 லட்சம் மோசடி: ஊழியா் மீது புகாா்

போடியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் தவணை வசூல் தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தாமல்

Updated On : 8 ஜனவரி 2021, 12:15 am IST
பகிர்:

போடியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் தவணை வசூல் தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக வங்கி ஊழியா் மீது புதன்கிழமை, மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோம்பை, கிழக்குரத வீதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவா், போடியில் செயல்பட்டு வரும் தனியாா் வங்கியில் களப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், வங்கி மூலம் கடன் பெற்றுள்ள மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களிடம் வசூலித்த கடன் தவணை தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ, வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாக வினோத்குமாா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வியிடம் கிளை மேலாளா் ராம்குமாா் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், வினோக்குமாா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments