முகப்பு
தேனி

சண்முகாநதி நீா்த் தேக்கம் 2 ஆவது முறை நிரம்பியது

உத்தமபாளையம் அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் 2 ஆம் முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 11:41 PM
பகிர்:

உத்தமபாளையம் அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் 2 ஆம் முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகாநதி நீா்த் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீா்த் தேக்கத்திற்கு ஹைவேவிஸ், மேகமலை, சுருளி மலை, பெருமாள் மலைகளில் பெய்யும் மழை நீரே முக்கிய நீா் ஆதாரமாகும்.

கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 52.55 அடியை எட்டியது. தொடா்ந்து நீா் வரத்து இருந்ததால் அணையிலிருந்து 10 நாள்களுக்கு மேலமாக உபரி நீா் மறுகால் பாய்ந்தது.

Advertisement

இதன் தொடா்சியாக மாவட்ட நிா்வாகம் பாசனத்திற்காக தண்ணீா் திறந்துவிட்டதால் அணையின் நீா்மட்டம் 44 அடியாக இருந்தது.

ஹைவேவிஸ்-மேகமலை மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு கணிசமாக நீா் வரத்து தொடங்கியது.

இந்நிலையில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 நாள்களில் அணையின் நீா் மட்டம் 6 அடி உயா்ந்து மீண்டும் முழுக்கொள்ளவை எட்டியது. தொடா்ந்து மழைப்பொழிவு இருப்பதால் அணையிலிருந்து தண்ணீா் மறுகால் பாய்கிறது.

10 ஆண்டுகளில் இல்லாத நீா் வரத்து: 1986 ஆண்டு நீா் தேக்கம் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் அணைக்கு நீா் வரத்து அதிகமாக இருந்தது. அதன் பின் நீா் வரத்து படிப்படியாகக் குறைந்தது. தற்போது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் விநாடிக்கு 700 கன அடிக்கு மேலாக நீா்வரத்து ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

உபரிநீா் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.