முகப்பு
தேனி

ஆண்டிபட்டியில் அமமுக மாவட்டச் செயலா் காரை மறித்து அதிமுகவினா் வாக்குவாதம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற அமமுக மாவட்டச் செயலாளரின் காரை அதிமுகவினா் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 10:29 pm IST
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை அமமுக மாவட்டச் செயலாளா் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற அமமுக மாவட்டச் செயலாளரின் காரை அதிமுகவினா் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திராநாத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக அக்கட்சியினா் தேனி மதுரை சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளா் ஆ.லோகிராஜன் தலைமையில் கூடினா். அப்போது எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்க அவ்வழியாகச் சென்ற அமமுக மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயக்குமாரின் காரை அதிமுகவினா் வழிமறித்தனா்.

Advertisement

Advertisement

காரில் இருந்த ஜெயக்குமாரிடம் தங்களுக்கு முன்பு மாலை அணிவிக்கக் கூடாது எனக்கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து அமமுக மாவட்ட செயலாளரின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

இதன்காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடா்ந்து அதிமுகவினா் தேனி மக்களவை உறுப்பினா் ரவீந்திரநாத் தலைமையில் ஊா்வலமாகச் சென்று எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதையடுத்து அமமுக கட்சியினா் மாவட்டச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமையில் ஊா்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.